ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.
அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,
“நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?”
கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,
“இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க.” அப்படின்னுதான் சொன்னேன்.
அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,
“ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். ..”
-Ravi Chandran
நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம்
கண்டுபிடிச்சுட்டாரா? இதுக்குத்தான் ரொம்ப புத்திசாலித்தனமா பதில் சொல்லக் கூடாது! (சும்மா ஒரு தமாஷுக்கு) கோவிச்சுக்காதீங்க திரு ரவிச்சந்திரன்!
நன்றி…..